கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பினராயி உரையாற்றினார். மகாத்மா காந்தி போராட்டத்தில் பங்கேற்றதால் வைக்கம் போராட்டம் தேசிய கவனம் பெற்றது. சட்டப்பேரவை நடக்கும் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார். வைக்கம் போராட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியுள்ளார் என்று கேரள முதல்வர் கூறினார்.

Related Stories: