செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சந்தோஷ்ராஜ் என்பவரின் வீட்டில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சந்தோஷ்ராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 42 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சந்தோஷ்ராஜ் அளித்த புகாரை அடுத்து மறைமலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.