திருவள்ளூரில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

சென்னை: திருவள்ளூரில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மாதவரம் தொகுதி பரத் நகரில் ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பப்பட்டது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 1,069 குடிநீர்த் திட்டப்பணிகள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories: