கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி

புதுடெல்லி:  வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில்,  ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு  9 பேர் மயக்கமடைந்து உயிருக்கு போராடினர்.  இதில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மற்ற மூன்று பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் இரவில் தூங்கும்போது கொசுவை விரட்டுவதற்காக ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது கவிழ்ந்து விழுந்து தீ பற்றியது தெரியவந்தது.

Related Stories: