குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில் சுகாதாரமற்ற கழிவறை தூய்மைப்படுத்த கோரிக்கை

குளித்தலை, மே 26:  குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறையை தூய்மைபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ் தளத்தில் கூட்டு அரங்கம் உள்ளது.  இந்த அரங்கத்தில் கலெக்டர், டிஆர்ஓ  தலைமையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.  மேலும் அனைத்து துறைக்கும் இந்த அரங்கில் தான் அலுவல் கூட்டம் நடைபெறும்.  இந்த கூட்ட அரங்கில் உள்ள கீழ் தளத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனி கழிவறை கட்டப்பட்டது.

ஆரம்பத்தில் தூய்மையாக இருந்தது.  கால போக்கில் பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனால் அலுவல் வேலையாக கிராமபுறங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். என சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் கழிவறைகளை தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: