மும்பை: வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. மராட்டிய மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேற்கு வாங்க மாநிலம் ஹௌராவில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தீடிரென கலவரம் வெடித்தது.