வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு

மும்பை: வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. மராட்டிய மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேற்கு வாங்க மாநிலம் ஹௌராவில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தீடிரென கலவரம் வெடித்தது.

இரு தரப்பும் கல்வீசி தாக்கிக்கொண்டதில் ஏராளமானோர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் வதோதராவில் ராமநவமியை ஒட்டி நடைபெற்ற பேரணி மசூதியருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் இரு தரப்பு மோதல் வெடிக்கவே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதே போல் உத்திரபிரதேச மாநிலம் மதுரா, லக்னோ நகரங்களிலும் ராமநவமி பேரணியில் கலவரம் மூண்டது. 

Related Stories: