ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புக்கள் எண்ணிக்கையானது 13509ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மட்டும் 3,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் தொற்று பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2 மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 8 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: