கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை!

சென்னை: கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. நங்கவரத்தில் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு காணும் இந்த காலகட்டத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: