சென்னை: சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டே முன்னுரிமை வழங்கி அகலப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.