மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது

புழல் காவாங்கரையை சேர்ந்தவர் சங்கர். பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களுக்கான சான்று வழங்க பழவேற்காடு மருத்துவமனை ஊழியர் லோகேஷ் (உதவியாளர்) சுமார் ரூ. 1 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.  உடல்நலம் சரியில்லாத தமது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் வேண்டும் என மருத்துவர் சங்கர் கேட்டுள்ளார். இருப்பினும், பணத்தை கொடுத்தால் மட்டுமே சான்று வழங்க முடியும் என லோகேஷ் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மருத்துவர் சங்கர், இதுதொடர்பாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் மருத்துவர் சங்கர் பழவேற்காடு மருத்துவமனையில் ரசாயனம் தடவிய ரூ. 30,000 பணத்தை லோகேஷ் உதவியாளர் ரமேஷிடம் வழங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ர் ரமேஷிடம் விசாரணை நடத்தியதில், மருத்துவமனை ஊழியர் லோகேஷிற்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் ரமேஷூக்கு முழு சம்மதம் இல்லை என தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து, லோகேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓய்வு பெற்ற மருத்துவர் சங்கரிடம் மருத்துவமனை ஊழியர் லோகேஷ் லஞ்சப்பணம் கேட்டு  பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* வருவாய்த்துறை அலுவலகத்தில் சோதனை பொன்னேரி வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கியது தொடர்பான புகார் வந்தது. இதுகுறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: