ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘கடந்த கொரோனா தொற்று காலத்தில் மருத்துவ பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகளுக்கு உணவு வழங்கிய உணவு விடுதிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டது. இதுபற்றி அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘நியாயமான கட்டணத்தில் உணவு வகைகளை வழங்கியவர்களுக்கு கட்டணம் வழங்கப்பட்டு விட்டது. ஓட்டலே இல்லாமல் உணவு சப்ளை செய்யப்பட்டதாக அநியாயமான முறையில் கொடுக்கப்பட்ட ரசீதுகளுக்கு தான் கட்டணம் கொடுக்கப்படவில்லை. அதுவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உண்மையிலேயே உணவை தரமாக வழங்கி இருந்தால் அதற்கான பணம் செலுத்தப்படும்’’ என்றார்.

Related Stories: