வாஷிங்டன் : சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபடும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தை தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய தூதருக்கு மிரட்டல் விடுக்கும் நிலையிலும் போராட்டக்காரர்கள் பேசினர்.