கோயில் பூசாரி தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அருகே கோயில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள் (எ) ஆகாஷ் (22). இவர், வீட்டிலேயே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி, அதில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும், தனது நண்பர் ராஜேசுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு சென்ற வெங்கடேசபெருமாள், வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நேரமாக வெங்கடேசபெருமாள் கதவை திறக்காத்தால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெங்கடேசபெருமாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: