தாம்பரம்: தாம்பரம் அருகே கோயில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள் (எ) ஆகாஷ் (22). இவர், வீட்டிலேயே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி, அதில் பூசாரியாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும், தனது நண்பர் ராஜேசுடன் பேசிவிட்டு, வீட்டிற்கு சென்ற வெங்கடேசபெருமாள், வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.