ஒரேநாளில் 1,573 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடுமுழுவதும் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4 பேர் பலியாகி விட்டனர். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1573 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவை சேர்ந்த 4 பேர் பலியாகி விட்டனர்.  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 10,981ஆக உயர்ந்துள்ளது. ஜனவரி 1 முதல் மார்ச் 21 வரை இன்புளூயன்சா எச்3என்2 வகை பாதிப்பு எண்ணிகை 1,317ஆக உள்ளது என்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.

Related Stories: