வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் அபேஸ்

பொன்னேரி: ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  மீஞ்சூர் அடுத்த மேலூர் பள்ளி தெருவை சேர்ந்தவர் உதயன்(30).  இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்  மீஞ்சூர் வேளாளர் தெருவில் உள்ள கூட்டுறவு தொடக்க வங்கியில் பணம் கட்டுவதற்காக நேற்று முன்தினம் மதியம்  ரூ.2.30 லட்சம்  கொண்டு வந்தார். இதில், வாங்கியின் முன்பு தனது ஸ்கூட்டியை நிறுத்தினார்.

வைத்திருந்த பணத்தில், ரூ.1.80 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தான் ஓட்டி வந்த வண்டியின்  சீட்டை திறந்து வைத்துள்ளார். வங்கிக்கு சென்று பணம் கட்டிய பிறகு மீண்டும் வந்தவர் தனது, ஸ்கூட்டியை எடுக்கும் முன் தான் வைத்த இடத்தில் பணம் உள்ளதா என வண்டியின் சீட்டை  திறந்து  பார்த்ததில்  அதிர்ச்சி அடைந்தார்.  இதில், ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசில் உதயன்  புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து  சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிளை ஆதாரமாக வைத்து, இந்த சம்பவத்திற்கு காரணமாக மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: