புதுடெல்லி: 2022-23ம் நிதியாண்டிற்கான இபிஎப் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் (இபிஎப்ஓ) உச்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அறங்காவலர் குழு கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது.
இதில், 2022-23ம் நிதியாண்டிற்கான பிஎப் வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பிறகு அரசாணை வெளியிடப்படும்.