சென்னை: பள்ளி மாணவர்கள் விவரம் திருட்டு பற்றி மத்திய குற்றப் பிரிவின் சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை தொடங்கியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலக பணியாளர்களிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்கும் கும்பலை சைபர் க்ரைம் காவல்துறை தேடுகிறது.