சென்னை: நடுவானில் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் அமெரிக்க பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட்ட பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை தருவதற்காக தரையிறக்கம் செய்யப்பட்டது.