சென்னை: சமூக நலத்திட்டங்களிலேயே இது மாபெரும் முன்னெடுப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதவி தேவைப்படும் எந்த பெண்களையும் மனிதநேய உணர்வுள்ள எனது தலைமையிலான அரசு கைவிடாது எனவும் முதல்வர் கூறினார். குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உரிமை தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.