சென்னை: செப்டம்பர் 15ல் தொடங்க உள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டம் தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கமளித்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தேர்தல்வாக்குறுதிகளுடன் அறிவிக்காததையும் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 20ஆம் நூற்றாண்டின் மகத்துவ திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பேரவையில் முதலமைச்சர் உரையாற்றினார்.