புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் மர்ம நபர்களால் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக வில்லியனூரை சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தா தனது கூட்டாளிகளை ஏவி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.