ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 10ம் நாளாக முடங்கியது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம், ராகுலின் லண்டன் பேச்சு மற்றும் அதானி குழும விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. 2 நாள் விடுமுறைக்கு பின் கூடிய இரு அவைகளும் எதிர்கட்சிகளின் அமளியால் சிறிது நேரத்திலேயே முடங்கின.

Related Stories: