புதுடெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21.6 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான ஊதிய உயர்வு பட்டியலை வௌியிட்டுள்ளது.