தண்டையார்பேட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தண்டையார்பேட்டை திலகர் நகர் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 100 பேருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு கண்சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து, 100 பெண்களுக்கு புடவை மற்றும் மஞ்சள் பை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையை தொடங்கி வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: வட சென்னை வளர்ச்சி பெற தமிழக முதல்வர் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
