சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பதவிக்கான கலந்தாய்வு, வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளர்உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் காலியாக உள்ள 831 பணியிடங்களுக்கு, கடந்த 2.7.2022 தேர்வு நடைபெற்றது. இதில் 1,724 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 1594 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.
