திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிலர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதை வழியாக வாகனத்தில் திரும்பினர். அப்போது சாலையோரம் நடமாடிய சிறுத்தை ஒன்று, அங்குள்ள புதர் அருகே மறைந்து நின்றபடி தண்ணீர் குடித்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் அங்கிருந்து சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.