ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் இன்று அதிகாலை 2.16 மணியளனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.