பெண் ஐபிஎஸ் அதிகாரியை மணந்தார் பஞ்சாப் அமைச்சர்

சண்டிகர்: பஞ்சாப் ஆம் ஆத்மி அரசின் கல்வி அமைச்சர்  ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ்,  ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ். இவர் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள அனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி சார்பாக முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். தற்போது மாநில கல்வி துறை அமைச்சராக இருந்து வருகின்றார். இந்நிலையில் அமைச்சருக்கும், அரியானா மாநிலத்தை சேர்ந்தவரும், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பணியில் இருப்பவருமான ஐபிஎஸ் அதிகாரி ஜோதி யாதவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம்  நேற்று திருமணம் நடைபெற்றது. நங்கால் அருகே உள்ள சீக்கிய குருத்வாராவில் சீக்கிய முறைப்படி அமைச்சர் ஹர்ஜோத் சிங் மற்றும் ஜோதி யாதவ்  திருமணம் நடைபெற்றது.

Related Stories: