புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி போராட்ட பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 40 எம்பிக்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். அதானி முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை கோரி எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினார்கள்.