வீட்டை உடைத்து 2 சவரன் திருட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் ரவி (63). போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி அமுதவல்லி. இவர்கள் இருவரும் கடந்த 20ம் தேதி இரவு காசிக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ரவியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் செல்போனில் தகவல் தெரிவித்தனர். ரவியின் மருமகன் பாலகுமார் (29). வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 சவரன் மதிப்புள்ள 16 கிராம் தங்க நாணயங்கள் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து ரவி எம்கேபி நகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். பகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், நகைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பீரோவில் வைக்காமல் வீட்டின் பரணில் வைத்ததால், சுமார் 40 சவரன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Related Stories: