இலங்கை படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. சிங்களப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு ஒன்றிய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: