சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக ஆங்காங்கே சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ் வெயில் நீடித்தது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 21.0 டிகிரி செல்சியஸ் நீடித்தது. சென்னை, கடலூர், வேலூர், மாவட்டங்கள் புதுச்சேரியில் இயல்பைவிட 2.1 டிகிரி செல்சியஸ் முதல் 4.0 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட வெப்பம் குறைந்து காணப்பட்டது.