சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு

அமிர்தசரஸ்: சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தான் புற்றுநோய் பாதிப்பால் அவதியுற்று வருவதாக உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.  பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமிர்தசரஸ் முன்னாள்  எம்எல்ஏவுமான நவ்ஜோத் சித்து, கடந்த 1988ம் ஆண்டு நடந்த சாலை மறியல் வழக்கில்  கடந்தாண்டு மே 20ம் தேதி முதல் ஓராண்டு சிறை தண்டனைக்கு  உட்படுத்தப்பட்டார். தற்போது பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அவர், நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவார் என்று  எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில்  நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் வெளியிட்டுள்ள  உருக்கமான பதிவில், ‘எனக்கு இரண்டாம் நிலை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் (நவ்ஜோத் சித்து) செய்யாத குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்னிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்களுக்காக (கணவர் சித்து) காத்திருப்பது, உங்களை விட அதிகமாகத் துன்பப்படுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: