சென்னை: பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். இவ்வளவு மாணவர்கள் ஏன் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதலமைச்சர் தொலைபேசி மூலம் கேட்டார் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கூறினார்.