பிணையப் பத்திரங்கள் வரும் 28ம் தேதி ஏலத்தின் மூலம் விற்பனை

சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் வரும் 28ம் தேதி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்று நிதித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து நிதித்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 28ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 28ம் தேதியன்று 2023 சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: