சிக்கமகளூரு: பாஜ தேசிய பொது செயலாளரும், எம்எல்ஏவுமான சி.டி.ரவி, தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். அண்ணாமலை சொல்வது சரி. அப்படி சொன்னால் தான் அதிமுகவினர், தாங்களாக எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்கள். 1990ம் ஆண்டு எங்கள் கட்சி இருந்ததுபோல், தற்போதும் இருந்து வருகிறது. ஆனால் பாஜவின் ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது. எங்களை தேடி அவர்கள் வருவார்கள்.