தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், `எங்கே எனது வேலை’ என்ற பெயரில் பிரசார பயணத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஒன்றிய அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பவும், பகத்சிங் வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, `எங்கே எனது வேலை’ என்ற பிரசார பயணம் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு, தண்டையார்பேட்டை ஜீவா பூங்காவில் இருந்து தொடங்கப்பட்டது. இதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பிரசார பயணம் ஏப்ரல் 2ம்தேதி திருச்சியில் முடியும். அங்கு எழுச்சி மாநாடு நடக்கிறது.