சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேயத்திருநாள் `அன்பே ஆன்மீகம் அதுவே தமிழ்ஞானம்’ எனும் நிகழ்ச்சி, எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சுதாகர் தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், எழும்பூர் ரித்தர்டன் சாலையில் உள்ள பி.கே.என் மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என ஒவ்வொரு திட்டத்தையும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் போல், மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். நமக்கு என்ன தேவை என்று அவரே சிந்தித்து செயல்படுத்துபவர் கலைஞர். சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வர் நம் தலைவர். மகத்தான திட்டங்கள் எல்லாம் கலைஞர் கொண்டு வந்தார்.