ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். குன்றத்தூர் ஒன்றியம், எழிச்சூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஒரத்தூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம், சாலமங்கலம் ஊராட்சி சிறுமாத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம், படப்பை ஊராட்சி பெரியார் நகரில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், மேட்டு தெருவில் அங்கன்வாடி மையம், கரசங்கால் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம், பழந்தண்டலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், அமரம்பேடு ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சமையலறை உள்ளிட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.