திருச்சூர்: திருச்சூர் மருத்துவமனையில் குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின. கேரளா மாநிலம் திருச்சூரின் ஒளரி பகுதியில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குழந்தைகள் ஐசியூவில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், அருகிலுள்ள பிரசவ வார்டுக்கும் மளமளவென புகை பரவியது. இதில் நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் குழந்தைகள் ஐசியூவில் இருந்த 7 குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.