அரியலூர்.மே18: திருமானூர் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள இலந்தைகூடம்-அரண்மனைக்குறிச்சி சாலையில் வயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடிந்து 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர் அன்பழகன், மேற்பார்வையாளர் வெங்கடாசலம் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை மதுபான கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு, அவ்வழியே வந்தவர்கள் திருமானூர் போலீசாருக்கும், விற்பனையாளருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற திருமானூர் போலீசார் மற்றும் டிஎஸ்பி சிவமணி ஆகியோர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தனர்.