சென்னை: கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியின்போது கடல் அலையில் சிக்கி மாணவர் மதனகோபால் உ யிரிழந்தார். மாணவர் மதனகோபால் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி தாய் சர்மிளா, சகோதரி வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.