தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை பேருந்து நிலையம் அருகே ஏழுகிணறு பகுதியில் அரசு அச்சகம் செயல்படுகிறது. இங்கு அரசு தொடர்பான முக்கிய ஆவணங்கள், தேர்தல் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்த அச்சகத்தில் இன்று காலை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அரசு அச்சகத்துக்கு ₹1.15 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன அச்சுப்பொறி இயந்திரம், ₹60 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள நான்கு வண்ணம் அச்சு இயந்திரம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் இயக்கிவைத்தனர். இதையடுத்து அச்சக ஊழியர்களிடம் வேலை குறித்து கேட்டறிந்தனர்.