12-ம் வகுப்பு பிரதான தேர்வை 45,000 மாணவர்கள் எழுதவில்லை: கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்ப பாடத்தேர்வுகளில் 45,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மொழி பாட தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து என்ன காரணம் என்று விசாரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நடந்த இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய பிரதான தேர்வுகளிலும் 45,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மொழிப்பாட தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களை மற்ற தேர்வுகளில் பங்கேற்கவைப்பதற்காக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இந்த தேர்விலும் 45,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: