ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகிபேட்டையில்  3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர். கட்டிட விபத்தில் சாகேதி அஞ்சலி (14), துர்கா பிரசாத் (17), சோட்டு (30) ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த கட்டிடத்தில் இருந்த 8 பேரில் 3 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: