விசாகப்பட்டினம்: ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகிபேட்டையில் 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர். கட்டிட விபத்தில் சாகேதி அஞ்சலி (14), துர்கா பிரசாத் (17), சோட்டு (30) ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.