சென்னை: செவிலிமேடு ஏரியில் இறைச்சிக்காக விஷம் வைத்து நீர் வாழ் பறவைகளை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ஏரியில் நீர்வள பறவைகளான உள்ளான், நாம கோழி ஆகிய நீர் வாழ் பறவைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இந்த ஏரியில் உள்ள பறவைகளை பிடித்து விஷம் வைத்து, இறைச்சிக்காக சாகடித்துள்ளனர் என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் வன சரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் பரணிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வனத்துறையினர் வருவதை கண்ட மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
