செங்கோட்டை அதிமுக நகர் மன்ற தலைவி ராமலட்சுமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டை நகர் மன்றத் தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர் மன்ற தலைவியாக அதிமுகவை சேர்ந்த ராமலட்சுமி பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 இந்நிகழ்ச்சியின் போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாதன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா மற்றும் செங்கோட்டை நகரச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ.ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் காசிதர்மம் துரை, நகர்மன்ற உறுப்பினர் பேபி ரஜப்பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: