வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பூபதி (வயது 57), முருகன் (வயது 40), சசிகலா (வயது 35), தேவி (வயது 32), சுதர்சன் (வயது 31), வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இந்த விபத்தில் அதிக காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், அதிக காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் சேலம் எடப்பாடி வெள்ளாளபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு சேமிப்புக் கிடங்கில் நேற்று மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அதே பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த வேடப்பனுக்கு ரூ.1லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Related Stories: