சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போரூர் பங்குனி உத்தரம் பால் காவடி, வேல் பூஜை சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், போரூர் பாலமுருகன் கோயிலில் ஏப்ரல் 4ம் தேதி முதல் 6 வரை, எங்கள் சபாவின் குடும்பத்தினரை 46 வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையும், தேர் திருவிழாவையும் நடத்த அனுமதிக்குமாறு கோயில் தக்காருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன், போரூரில் 1981-ம் ஆண்டு மனுதாரர் சபா உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை மூலம் பாலமுருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.