காஞ்சிபுரம்: உலக வன தினத்தை முன்னிட்டு, முசரவாக்கம் அரசு பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், டிஐஜி பகலவன், எஸ்பி சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் உலக வன தினத்தை முன்னிட்டு மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வனச்சரகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தனர்.